கோவை, நவம்பர் 18: 3 நாட்கள் நடைபெறும் "கோவையில் திருவையாறு" என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி டிசம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது.
கர்நாடக இசை பிரியர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் மார்க்1 ஈவன்ட்ஸ் சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலை அரங்கத்தில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் திறமையான இளைஞர்கள் கலந்து கொண்டு கோவை மக்களுக்கு இனிமையான பாடல்களை வழங்க உள்ளனர். மேலும், விபரங்களுக்கு உஜ்ஜயினி-யை (9943463000) தொடர்புகொள்ளலாம்.